பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 காப்புப் பருவம் திரு பிள்ளை அவர்கள் பொய்யடிமை இல்லாத புலவர் கள் சங்கப் புலவர்கள் என்று உளம் கொண்டு அவர்கள் இலத்தியம், இலக்கணம், மெய்ஞ்ஞான போதநூல் யாவற் றையும் உணர்ந்தவர்கள் என்பது உண்மையே. நக்கீரர், திருமுருகாற்றுப் படை பாடியுள்ளனர். அங்ங்னம் பாடு தற்குக் காரணம், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிடப் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறிஇச் சென்று பயன்எதிர்ச் சொன்ன பக்கமும் என்னும் தொல்காப்பிய நூற்பாவைப் படித்ததன் பயன கும். நக்கீரரது கயிலேபாதி காளத்திபாதி அந்தாதி என்னும் நூலில், நின்னில், வெளிப்படுவது ஏழ்உலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவும் ஆல்ை உரை என்னும் கருத்து மெய்ஞ்ஞான போத நூல் அறிவினல் ஏற்படுவது. இது சைவசித்தாந்த நூல் அறிவுக் கருத்தாகும். கபிலதேவ நாயனரது நூலாகிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூலில் வரும், இல்லை பிறவிக் கடல்ஏறல் இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில்-கொல்லை விடையான வேதியனை வெண்மதிசேர் செம்பொன் சடையானைச் சாராதார் தாம்' என்னும் வெண்பாவின் கருத்துத் திருக்குறளாம் இலக்கித் தில் வரும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவு னடிசேரா தர்ர் என்ற பாடலைப் படித்ததன் பயனே ஆகும். இதல்ை இலக்கி பங்களைப் பயின்றவர் என்பது புலகிைறது. திரு பிள்ளை