பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 காப்புப் பருவம் குறித்த நாளில் ஈண்டிருேம். ஆகவே, வேறு ஒருநாளில் விழாவைக் கொள்ளவும்” என்று கூறக் காடவர் கோன் அதி சயித்து, பூசலாரைக் காணப்புறப் பட்டனர். திருநின்றவூரை அடைந்தனர். பூசலார் கட்டிய கோவிலைத் தேடினர்; கண் டிலர். ஆனல் அங்குள்ளாரை விசாரித்தார்.அவர்கள் 'அப்படி ஒரு கோவில் இல்லையே' என்றனர். ஆனால், பூசலார் இருக் கும் இடத்திற்கு அரசரை அழைத்துச் சென்றனர், அவரைக் கண்டு மன்னர் வணங்கித் தொழுது பெரியீர், நீங்கள் கட் டிய கோவில் எங்குள்ளது? அதில் நீர் இன்று.சிவபெருமானத் தாபிக்கப் போவதாகச் சிவபெருமானே என் கனவில் கூறினர். அக்காட்சியைக் கண்டு வணங்கிப் போற்றவே இங்கு வந்தேன்.” என்று பணிவாகக் கூறினர். பூசலார் மருண்டார். இறைவரது திருவருளே வியந் தார். வியந்தவர் அரசனிடம் 'என்னே, இறைவர் தம் பெருங் கருணை! நான் கோவில் கட்ட எண்ணினேன். பொருள் போதுமானதாகக் கிடைக்கவில்லை. மனத்தால் கட்டலாமா என்று சிந்தித்துக் கட்டினேன். கட்டிய முறை இது. என்று கூறினர். அரசர் கேட்டு மகிழ்ந்து பூசலார் நாயனரை தொழுது போயினர். பூசலாரும் மனத்தால் கோவில் கட்டியது போலவே இறைவரையும் மனத்திலேயே தாபித்து மகிழ்ந்து இறைவன் திருவடியுற்ருர், இந்நாயனர் மனத்தால் ஆலயங் கட்டிய முறையினைச் சேக்கிழார் 'அன்பால், காதலில் கங்குல் போதும் கண் படாது எடுக்கலுற்ருர்’ என்றனர். 'கங்குல்போதும் கண் படாது' என்ற தல்ை ஊண் உறக்கம் இன்றிக் கோவிலேக் கட்டத் தொடங்கினர் என்பது பெறப்படுகிறது. இது காரணம்பற்றி "ஆகாரம் முதலிய மறந்து இராப் பகல் முயன்று’ எனப்பட்டது. காடவர் கோன் பூசலார் கட்டிய கோவிலேக் காண வந்த போது, ஊரார் அம்மன்னனிடம் 'செப்பிய பூசல் கோயில் செய்த தொன்றில்' என்று கூறினர்கள். இதல்ை நாயனர் கட்டிய கோவில் யாவர் கண்ணுக்கும் புலப்படவில்லை என்