பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 217 அருள் கலந்த கோவணம் வைக்கப்பட்ட போது, தராசுத் தட்டுச் சரிநிகராக இன்றித் தாழ்ந்து காட்டி நிற்க,அமர்நீதி யார் தட்டு உயர்ந்து நின்ற போது சேக்கிழார் பெருமானுர், இவ்வாருன நிலைக்கு விளக்கம் தருவார் போல, முட்டில் அன்பர்தம் அன்பிடும் தட்டுக்கும் முதல்வர் மட்டும் நின்றதட்டு அருளொடு தாழ்வுறு வழக்கால் பட்டொடு துகில் அனேக கோடிகள் இடும்பத்தர் தட்டு மேம்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு என்று பாடி இருப்பதன் உட்பொருளைக் கூர்ந்து நோக்குகை யில், தொண்டர்கனின் அன்புக்கு நிகராக இறைவன் அருள் நிற்காமல் தாழ்ந்து அவர்கள் திருவுளக் கருத்தை நிறைவேற்றி வைக்கும் என்பதை நன்கு உணரலாம். இதனையே ஈண்டு ஒப்பரிய தொண்டர் என்ற தொடர் விளக்கி நிற்கிறது. தொண்டர்கள் அருமையினும் அருமையானவர். அதனுள் தான் அவர்களைத் தெய்வமாகவே கொண்டு பேசி பெறுமிழலைக் குறும்பர் எனும் பரமயோகியார் சுந்தர ரைத் தெய்வமாகக் கொண்டு பூசித்ததை உதாரன மாகக் காட்டலாம். இங்ங்னம் தொழுது வந்தார் என்பதை, மையார் தடங்கள் பரவையார் மணவா ளன்.தன் மலர்க்கழல்கள் கையால் தொழுது வாயவாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாளினைக்கி 2. ய்வான்சேர உற்றநெறி இதுவே என்றன் பினில் உய்த்தார் 3 த் என்ற சேக்கிழார் பாடலால் காணலாம். துறைமங்கலம் சிவுப்பிரகாசர் இதனை இன்னமும் விளக்கமுற,