பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி ●海。 வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி ஆண்ட தெருவில் கயல்புவியான் மன்பதை காக் கும்கோமான் மன்னன் திறம்பாடி மின் செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல் விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல் என்பது ஊஞ்சல் பருவக் குறிப்பை உணர்த்தும் பாடல். கி. பி. நான்காம் நூற்ருண்டினரான மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் அம்மானைப் பருவம், ஊசல் பருவக் குறிப் புக்கள் உள்ளன. கேட்டாயோ தோழி கிறிசெய்த வாருெருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனஎல்லாம் காட்டிச்சி ம் காட்டித் தாட்டா மரைகாட்டித் தன்கருாைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாமேலே வீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மாளுய் என்றும், சீரார் பவளங்கால் முத்தம் கயிருக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாள்மலர்த்தாள் நாயடியேற் கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப் போரார் வேல்கண் மடவீர் பொன்னுாசல் ஆடாமோ என்றும் வருதல் காண்க. கி. பி. ஏழாம் நூற்ருண்டினரான திருஞானசம்பந்தரும் பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவக் குறிப்புக்களைத் தமது திருப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியா மேனி அருந்தகைய சுண்ணவெண்நீ றலங்கரித்தான், அமரர்தொழ அமரும் கோயில்