பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 263 என்று சிவஞான சித்தியாரும், கந்த வர்க்கமும் கிளர்மணப் புகையும் கவின் கொள் தீபமும் புனிதமஞ் சனமும் கொந்த விழ்ந்தநல் மலரும்மற் றுளவும் கொண்டு மாயையின் குணங்கள்ஒன் றிலராய் ஐந்து சுத்திசெய்ததம்புறம் இறைஞ்சி அங்கி யின்கடன் முடித்தருள் வழிநின் றிந்த நற்பெருங் கிரியையன் புடனே இயற்ற வல்லவர் எம்மருங் கிருப்பர் என்று மணிமொழியார்க்கு மணிகண்டர் உபதேசித்த உபதேச மொழிகளும், நறைமலி தருமள ருெடுமுகை நகுமலர் புகைமிகு வளர் ஒளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் குறைவில பதமணை தரஅருள் குணமுடை இறையுறை வனபதி சிறைபுனல் அமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே என்ற ஆளுடைய பிள்ளையார் அருள்மொழிகளும், நின்போல் அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த பைம்போ துழக்கிப் பவளம் தழைப்பன பாங்கறியா என் போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும்எல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ ஆறன் அடித்தலமே என்ற ஆளுடைய அருசுகளின் ஆர்வ மொழிகளும், முத்தனே முதல்வா முக்களு முனிவா மொட்டரு மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யும்