பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 28? பொன்னகரம்-தேவலோகம், இமைத்தல்-ஒளி விடுதல், விதிபிரம்மதேவன், உளத்தில்-மனத்தில், ஆடு உஆண்களும், மகடூஉ-பெண்களும், நந்த-மிகுமாறு, தழைக்குமாறு, நண் னியவர்கட்கு-கலந்து கொண்டவருக்கு, கதி-மோட்ச இன் பம், இது-இந்தக் குன்றத்துார், புவியகத்து-பூமியில், சந்தத் தவர். கவிகள், வண்ணச் செய்யுள்களைப் பாடுபவர். விளக்கம்: அணி வகைகளில் உயர்வு நவிற்சி அணியும் ஒன்று. அவ்வணிக்கு ஒர் எடுத்துக்காட்டாக இப்பாடலின் முதல் நான்கு அடிகள் அமைந்துள்ளன. குன்றத்துரசில் உள்ள மாளிகைகளும், நிலா முற்றங்களும், திண்ணைகளும், ஆகியவற்றின் முற்பகுதிகள் பொன்னுலும், மணியாலும் அமைந்துள்ளன என்று கூறப்பட்ட காரணத்தால், இஃது உயர்வு நவிற்சி அணியாயிற்று. 'வீறுகோள் அணி’ என்று கூறினும் அமையும், தேவலோகம் பொன்னுலகம் என்று கூறப்படுதல் மரபு. அத்தேவலோகம் போல, இந்தக் குன்றத் துாரும், விளங்குகிறது. அத்துடன், அத்தேவலோகத்தை விட வும் ஒளிவிட்டுத் திகழ்கிறது. அக்காரணம் கொண்டே தேவ லோகத்தில் உள்ள ஆண், பெண் என்னும் இரு பாலாரும் கண் இமைத்தலேக் குறைத்துக்கொண்டனர் என்று கூறியிருப்பது தற்குறிப்பு ஏற்ற அணியின்டால் படும். விண்ணுலக ஆடவர் பெண்டிரும் இமையாது பார்த்த வண்ணம் இருந்தனர் என்று கூறினும் அமையும். திருஞான சம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர் யாவரும் வீடு பேறுற்றுப் பேரின்பம் எ ப்தினர். எல்லோரும் சோதியுள் புகுந்தனர் என்பதைச் சேக்கிழார், அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்ருேர்கள் மணிமுத்த மாலே புனை மடவார்மங் கலம்பெருகும் பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினப்பாசம் துணிவித்த உணர்வினராய்த் தொழுதுடன் புக் கொடுங் கினர் என்று பாடியறிவித்தனர்.