பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 309 யாகும். அனபாயன் சேக்கிழாரது திருமுனி வேடத்தில் ஈடுபட்டு, தொண்டர் சீர்பரவு வார்எ னப்பெயர் சுமத்தி ஞானமுடி சூட்டுமுன் மண்ட பத்தினில் இருத்தி மற்றவரை வளவர் பூபதி வணங்கினன் என்பர் சேக்கிழார் புராண ஆசிரியர். சேக்கிழார் பெருமாளுர் சைவ சமயத்தின் மேன்மை யினைப் பல்வேறு இடங்களில் பண்புடன் பாடி அமைத்துள் ளார். ‘அருமறைச் சைவம் ஒங்குக' 'சைவமெய்த்திருவின் கோலம், 'ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே, பாரம் ஈசன் பணியலாது ஒன்றிலார்' என்பன போன்ற தொடர் களைப் பார்க்கும்போது, சேக்கிழார் பெருமாளுர் சைவப் பயிர் வளர்தற்கான முகிலாக இருந்தார் என்பது நன்கு பெறப்படுகிறது. சேக்கிழார் வாக்கு எங்கும் சைவை மணம் கமழும் முறையிலேயே அமைந்திருக்கும். இதனைப் பல்வேறு இடங் களில் காணலாம். ஆற்றைப்பற்றிக் குறிப்பிடும்போது, 'அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி, உண்ணெகிழ் கருனேயின் ஒழுக்கம்போன்றது” என்றும், வம்பு லாம்மல்ர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து எம்பி ரான இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால் என்றும், நெற்கதிர்கள் அலர்ந்து வளர்ந்திருந்த நிலையினைக் கூறும் போதும், 'அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந் தன கதிர்களெல்லாம்.’’ என்றும், அக்கதிர்கள் நன்கு முதிர்ந்து தலை சாய்ந்து நின்ற நிலையினைக் குறிப்பிடும் போது,