பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நாலப் பருவம் பெருஞ்சகடு தேர்காட்ட வினைஞர்ஆர்ப் பொலிபிறங்க நெருங்கியச துரங்கபல நிகர்ப்பனவாம் நிறைமருதம் நெய்தல்: புயல்அளப்பன எனவலை புறம்பணை குரம்பை அயல்அ வளப்பன மீன்விலைப் பசும்பொனின் அடுக்கல் வியல்அ ளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல்அ எப்பன பரத்தியர் கருநெடுங்கண்கள் Εμrr&υ: வெங்க திர்ப்பகல் அக்க டத்திடை வெய்ய வன்கதிர் கைபரந் தெங்கு மிக்கபி ளப்பின் நாகர்தம் எல்லே புக்கெரி கின்றன பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல் புகக சூழல புகுமபகல செங்க திர்க்கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினர் என்னும் இவ்வைந்து பாடல்களும் ஐந்திணைகளின் முதற் பொருள்கட்கு ஏற்ற உதாரணங்களாகும். இவற்றுள் கருப் பொருள்களும் நிறைந்திருப்பதைக் காணலாம். பெரும்பொழுது சிறுபொழுதுகட்குரிய பாடல்களும் சேக்கிழார் வாக்கில் உண்டு. மயிலொடுங்க வண்டாட மலர்க்கமல முகைவிரியக் குயில்ஒடுங்கும் சோலையின்மென் தளிர்க்கோதிக் கூவிஎழத் துயில்ஒடுங்கா உயிர்அனைத்தும் துயில்பயிலச் சுடர்வானில் வெயில்ஒடுங்கா வெம்மைதரும் வேனில்விரி தரும்நாளில்,