பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி உடு முகப்யித்தீன் ஆண்டவர் -அப்துல் காதிறுப் புலவர் காரணப் பிள்ளைத் தமிழ் - செய்குதாவூது வீலியுல்லா -சொர்ண கவி நயினு பிள்ளைத் தமிழ் முகம்மது பாவா புலவர் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் -செய்குeரான் புலவர் கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ் -செய்குதம்பிப் பாவலர் பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ்-செய்குமீரான் புலவர் இவ்வாறு பற்பல பிள்ளைத் தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் பல்கியுள்ளன. சைன பெளத்த புலவர்கள் பிள்ளைத் தமிழ் துரல்களைப் பாடி இருப்பதாக அறிதற்கு இல்லை. இதுவரை கூறப்பட்டு வந்த பிள்ளைத் தமிழ்க்குரிய இலக் கணங்களாலும், நூற்களாலும் புலவர்கள் தாம் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெரு மக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர் கட்கு உகந்தவர்கள் ஆகியோர்மீது பிள்ளைக் கவிபாடுவர் என்பது புலளுகிறது. மேலே, சுட்டப்பட்டவர்களைக் குழந்தையாக உளம் கொண்டு கற்பனை பல அமையப்படுவது இப்பிள்ளைத் தமிழ்க் கவி ஆகும். பாட்டுடைத் தலைவர் கள் பிள்ளைகளாகப் பாவிக்கப்பட்டவர்கள் அல்லரோ? அவர்களது அரும்பெருஞ் செயல்களைத் தம் குழந்தைப் பருவத்தில் எப்படிச் செய்திருக்க முடியும் என்ற ஐயம் ஏற்படல் கூடாது. அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற் கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக் கவியில் பாடவில்லை யாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும். ஆகவே, இதனே உளம் கொள்ளுதல் வேண்டும். குழந்தையாகக் கொண்டது பாவனையே அன்றி வேறன்று. ஈண்டு ஒர் இன்றியமையாத குறிப்பினை உளம் கொள் ளுதல் வேண்டும். இதுவரையில் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்களை ஒருவாறு அறிந்தனம். இத்தனைப் பிள்ளைத் தமிழ்