பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சப்பாணிப் பருவம் வாரேறும் முலைமடவார் மருங்கேறும் மலர்க்கனையொன் பாரேறும் புகழ்உறழ்ந்தைப் பதியின் வளம் பகர்வரிதால் என்றும் பாடியுள்ளார். (38) 8. படியிடை ஒருபை திவரு ணனைபுரி பாவலர் ஐந்திணையும் பகுத்தொரு முப்பொரு ளோடும் விரித்துப் பயனு கத்தெய்வம் கடிதலில் சினகரம் உள்ளன. ஒதக் கற்பித் தவநெஞ்சம் கனியக் கனியக் கண்ணிர் வாரக் கவிபா டிய இறைவ ஒடிவரி தாம்இரு பன்னிரு கோட்டக் துள் ஒரு கோட்டம்அலச தொருகோட் டமும்உறல் இல்லாய் நல்லாய் உலவ வளமைப்பல் குடிகள் நெருங்கும் குன்றத் துரன் கொட்டுக சப்பாணி கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி (அ. சொ.) படியிடை-பூமியில், ைபதி ர ம் - நா டு, ஐந்திணையும்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்களையும், ஒரு-ஒப்பற்ற, முப்பொருள்முதற் பொருள், கருப் பொருள், உரிப் பொருள், கடிதல்நீக்குதல், சினகரம்-கோவில், வார-ஒழுக, இறைவ-தலைவ, ஒடிவு அரிதாம்-தாழ்வு கூறப்படுதற்கு அரியதாம், அழிவில் லாத, இரு பன்னிருகோட்டம்-இருபத்து நான்கு கோட் டங்கள், ஒரு கோட்டம்-ஒப்பற்ற புலியூர்க் கோட்டம், அலாது-அல்லாமல், (கோட்டமும் கோணலும், வேறு இல்லை என்றவாறு) உறல்-பொருத்துதல், உலவா-குறையா. விளக்கம்: சேக்கிழார் பெருமாளுர் தமக்குப் பின்வந்த புலவர்கட்கெல்லாம், ஒரு நாட்டை வர்ணிக்க வேண்டு மாயின், அந்த நாட்டின் ஐந்திணை வளங்களையும்