பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சப்பாணிப் பருவம் இப்பாடல்களில் அடங்கிய அரிய சீரிய பொருள்களைச் சீரிய முறையில் விரித்துக் காட்டியுள்ளார் சேக்கிழார் பெரு மாஞர். அவற்றுள், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக ஆழ்க தியதெல் லாம்.அரன் நாமமே, சூழ்க வையக மும்துயர் தீர்கவே என்னும் பாடற் ரு, அந்தணர் தேவர்ஆன் இனங்கள் வாழ்கஎன்று இந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச் சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன் வந்த அர்ச் சனவழி பாடு மன்னவாம் ஆழ்க தியதென் ருேதிற் றயல்நெறி வீழ்க என்றது வேறெல்லாம் அரன் பெயர் சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும் வாழி அஞ்செழுத்து ஒதி வளர்கவே வேள்வி நற்பயன் வீழ்புனல் ஆவது நாளும் அர்ச்சனே நல்லுறுப் பாதலால் ஆளும் மன்னனே வாழ்த்திய தர்ச்சனை மூளும் மற்றிவை காக்கும் முறைமயால் சொன்ன வையக முந்துயர் தீர்கவே என்னும் நீர்மை இகபரத் தில்துயர் மன்னி வாழுல கத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர் என்று உரைகூறி விளக்கினர். இவ்வாறு வாழ்க அந்தணர் என்னும் ஒரு பாடலுக்கு விளக்க உரை கூறிச் சென்றனர். இம் முறைப்படியே ஏனைய பதினுேரு பாடல்கட்டும் விளக்க உரை தந்துள்ளமையின் இவரை ஆசிரியர் நகுபாசுர முதல் உரை செய்தலிளுல் நல்ல உரை ஆசிரியர்' என்றனர். திருப் பாசுரப் பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. இப் பன்னிரு பாடல்கட்குச் சேக்கிழார்