பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ் அமைப்பு சேக்கிழார் பெருமாளுர்மீது பாடப்பட்டமையின், இது சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனப்பட்டது. இதன் ஆசிரியர் துறைசை ஆதீனம், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். இவர் பிள்ளைத்தமிழ் வகையில் திருப்பெருமனநல்லூர்த் திருவெண்ணிற்றம்மை பிள்ளைத் தமிழ், திருவானைக்கா அகிலாண்டா நாயகி பிள்ளைத்தமிழ், உறையூர் பூரீ காந்தி மதியம்மை பிள்ளைத் தமிழ், திருக்குடந்தை பூரீ மங்க ளாம்பிகை அம்மைப் பிள்ளைத் தமிழ், திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ், திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ், திருவாவடுதுறை ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் நூல்களையும் பாடியுள்ளனர். திரு பிள்ளை அவர்கள் பூர் சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும் பூ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழிலும், காப்புப் பருவத்தைப் பாடி இருக்கும் அமைப்பினை நன்கு ஊன்றிக் கவனித்தல் வேண்டும். காப்புப் பருவத்தில் எல்லாப் புலவர் களும், ஏன் திரு பிள்ளை அவர்களும் திருமால், சிவபெருமான், உமை, கணபதி, முருகர், அலைமகள், கலைமகள், துர்க்கை, நால்வர் ஆகியவர்கட்டு வணக்கம் செலுத்திப் பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ காக்குமாறு வேண்டுவர். ஆல்ை, திரு பிள்ளை அவர்கள் சேக்கிழார் பிள்ளைத் தமிழில் காப்புப் பருவத்தில், திருத்தொண்டத் தொகையில் கூறப்பட்ட திருத் தொண்டர்களையே காப்புக் கடவுளர் களாகப் பாடப்பட்டிருத்தலை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் அகச் சந்தானம் புறச் சந்தாச்ைசாரியர்,