பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரசனைப் பருவம் 481 தண்டல்-தவா-நீங்காத சரோருகம்-தாமரை, ஞெகிழி-இது வும் ஒருவகைச் சிலம்பு, இரட்ட-ஒலிக்க, கொண்டல்-மேகம், அமர்-விரும்பும், கொடைவள்ளன்மைக் குணம், கரதலம்கை, சேவையர் குலம்-வேளாளர் குலம், சிகாமணி-சிரோ ரத்னமே, சடாடவியர்-சடைக்காட்டையுடையவராம் சிவ பெருமான், மன்றை - பொற்சபையை, சடை+ அடவி, பராவி-போற்றி. விளக்கம்: குழந்தையைத் தம் அ ரு கே அன்புடன் அழைக்கும் பருவமே வாரானேப் பருவமாகும். இது பன்னிரண்டாம் மாதம் நிகழும் நிகழ்ச்சி. ஆண்டு வரையின் ஈண்டு வருக' என்பது பிங்கலந்தை. இது வருகைப் பருவம் என்றும் கூறப்பெறும். வாரானே என்பது வா+கு + ஆனே எனப்பிரியும்-ஆன தொழிற்பெயர் விகுதி. விரித்தல் விகாரம் வா-பகுதி. இப்பாடல் குழந்தைகட்குப் பூட்டப்படும் அணிகள் இன்னின்ன என்பதைப் புலப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு குழந்தைகட்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்ப்பது பெற்ருேர்க்கும் மற்முேர்க்கும் உவகையாகும். குமரகுரு பரரும் முத்துக் குமாரசாமிபிள்ளைத் தமிழில், செம்பொன் அ டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத் திருவரை அரைஞாண் அரைமணியொடுமொளி திகழரை வடமாடப் பைம்பொன் அசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப் - பட்ட துதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம் பொதி குண்டல மும்குழை காதும் அசைந்தாடக் கட்டிய சூழியும் உச்சியும் உச்சிக் கதிர்முத் தொடும்ஆட 31