பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எள்ளும் திறத்துப் பரசமயர் ஏறு வருக தேறுதலில் எங்கள் உணர்வின் கணும் மதுரித் திணிக்கும் இருங்கோல் தேன்வருக தெள்ளும் புலத்தர் பெறுகாம தேனு வருக அருகந்தச் சிந்தா மணியைப் பொருட்படுத்தாச் செல்வச் சிந்த மணிவருக உள்ளும் அவருக் கெய்ப்பிடிைவைப் பொத்துள் எழும்ஒள் ஒளிவருக ஒழியாப் பத்திக் கட்ல்வருக உலவ தமைந்த சிவயோகம் கொள்ளும் சைவப் பயிர்வளர்க்கும் கொண்ட்ல் வருக வருகவே குன்றைப் பொருமா னிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே அ. சொ. எள்ளும்-இழிவாகப் பேசும், திறத்து-தன்மை யுடைய ஏறு-சிங்கமே உணர்வின்கணும்-உணர்வினிடத்தும், மதுரித்து - இன்பம் செய்து, இருங்கோல்தேன் - பெரிய கொம்புத்தேனே, தெள்ளும் புலத்தார்-தெளிந்த அறிவுடை யோர், ஞானிகள் அருகந்தர்-அருகர்களுடைய, சிந்தா மணியை-சீவக சிந்தாமணி என்னும் நூலை, சிந்தாமணி-தேவ லோகத்தில் உள்ள சிந்தாமணியே, உள்ளுமவர்க்கு-நினைப் பவர்களுக்கு, எய்ப்பிடைவைப்பு-தளர்ந்த காலத்து உதவும் சேமநிதி, போகம் - விளைவு, சிவபோகம் - ஆன்மாவின் ஆனந்தானுபவ நிலை, உலவாது-குறையாது. விளக்கம்: பரசமயத்தவர் ஈண்டுச் சமணர்கள், பெளத் தவர்கள். அவர்கள் செயல் நற்செயலாகப் புலகைவில்லை. அவர்கள் சம்பந்தர் இருந்த இடத்திற்குத் தீயிட்டனர் என்ருல், அவர்தம் கொடுமைக்கு வேறு யாது கூற இயலும்?