பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 அம்புலிப் பருவம் என்றது உயர்வு நவிற்சி. கொடியின் உயர்வைக் கூறவருங் புலவ்ர்கள் கொடிக்சீலை சந்திரனின் மாசினைத் துடைக்கும் என்றும் கூறுவர். சேக்கிழாருக்குரிய பெயர்களில் அருண்மொழி என்பதும் ஒன்று. அருண்மொழி என்ற பெயர் இராஜராஜனுக்குரிய பெயர். 'அலை புரியும் புனல்பொன்னி ஆறுடைய சோழன் அருண்மொழிக்கு' என்ற திருமலைக்கல் வெட்டைக் காணவும். பெற்றேர்கள் இம்மன்னனிடத்துக் கொண்ட அன்பினுல் இப்பெயரைச் சூட்டினர். சேக்கிழார் தெய்வ ஒளி பெற்ற மையின், 'அருள் உருத்தேசுபொலி அருண்மொழித் தேவன்' என்றனர். இல்லை என்ருல், அநபாயன் கவரி வீசி இருப்பான ? (62) 2. மேயஅம் போருகம் எலாம்.குவி கரத்தினை இராமனை அட்ங்க அளவா வியன்சாலி யொடுபொலிய மகிழ்வையால் ஒர் அறவர் விழியின்வெளி வந்தொளிருவை பாயபர மன்சட் டவிஅமரும் வரநதிப் பந்தமுளை நந்தமர்கரப் - பண்ணவனும் மிகையெனப் பல்உயிரும் ஒம்பிடப் படுகருவி யாய்நின்றன நேயமிகும் இவையாதி யால்எங்கள் பெருமானை நிகர திராய்அடுக்கு நிலையேழு கொண்ட்மையின் உலகேழு மேஎன நிாம்புபா வலர்புகழுதற் காயமணி மாளிகைக் குன்றைநகர் ஆளியுடன் அம்புலி ஆட்வாவே அருள் உருத் தேசுபொலி அருண்மொழித் தேவனுடன் அம்புலி ஆடவாவே (அ. செ மேய-தடாகங்களில் பொருந்திய, அம் போருகம்-தாமரை மலர்கள், இராமனே-இரவுக்கரசய்ை