பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறும் காலமும் தொண்டை நாடு : நந்தம் தமிழ்நாடு சேர, சோழ, பாண்டியநாடு என்ற முப்பெரும் பிரிவினை உடையதான லும், தொண்டை நாடு, நடுநாடு கொங்குநாடு என்ற பிரிவினையும் கொண்டு திகழ்கிறது; தொண்டைநாடு என்பது, மேற்குப் பவழமலே, வடக்கு வேங்கட மலை, கிழக்குக் கீழ்க்கடல், தெற்குப் பெண்ணையாற்றையும் எல்லை யாகக் கொண்டு திகழ்ந்தது; இதல்ை செங்கற் பட்டு மாவட்டம், வட ஆர்க்காடு மாவட்டம், தென்னுர்க்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியினையும் கொண்டு விளங்கியது. சிற்றுார் சில்லாவும் இதனுடன் சேர்ந்து விளங்கியது; ஆனல், இதுபோது நாட்டு எல்லைப் பிரிவினில் வேங்கடத் தையும், சிற்றுாரையும் இழக்க நேர்ந்தது; காஞ்சிபுரம் தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்தது. பழங்காலத்துத் தொண்டை நாட்டு எல்லை இன்னது என்பதைத் தனிப்பாடல் ஒன்ருல் அறியலாம். மேற்குப் பவளமலே வேங்கடம் நேர்வடக்காம் ஆர்க்கும் உவரி அணிகிழக்கு-பார்க்குளுயர் தெற்குப்பி னகிதி கழ்இருப தின்காதம் நற்ருெண்டை நாடெனவே நாட்டு என்ற பாடலைக் காண்க. தொண்டை நாடு முதல் முதல் குறும்பர் நாடாகத் திகழ்ந்ததாகக் கூறுவர். இக்குறும்பர்கள் தம் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு பொழுது போக்கி வாழ்ந்தனர். ஆகவே, இந்நாடு குறும்பர் நாடு என்ற பெயருடன் இருந்தது என்பர். இக்குறும் பர்களே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆண்டதாகவும் கூறுவர். அதன் பின் ஆதொண்ட சக்ரவர்த்தி அக்குறும் பரிடமிருந்து நாட்