பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வில்லூரும் மணிமோலி வளவர்பெரு மான்பொன்அடி விழாத மருவலர்க்கும் வெண்ணிறு கண்மணி புனைந்தைத் தெழுத்தெணு வீணராம் சமயருக்கும் எல்லூரும் ஒண்சிவ மணம்கமழ்தல் இல்லா தியைந்தசிந் தாமணிமுதல் எந்நூற்கும் நெய்தலம் பறைமுழக் கேயாக எல்ஒளி:மழுக்கும்மேனிச் சொல்லுரும் எம்பிரான் பெருமதம் பொழிமண் துழாம்.கைமா லியானைதந்த தோல்போர்வை போர்த்ததெனத் தென்றல்வந் துலவஅழல் தோற்றுதே மாஞ்சோலைமேல் செல்லுனரும் மேன்மையமை துண்டிர வளநாட சிறுபறை முழக்கியருளே தென்றலங் கன்றுலவு மன்றஒண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (அ. சொ.) வில்-ஒளி, ஊர்தல்-பரவுதல் மோலி-முடியினை யுடைய, வளவர் பெருமான்-அநபாய சோழமன்னன், பொன்-அழகிய, மருவார்க்கும் பகைவர்க்கும், கண்மணிஉருத்திராக்க மாலை, புனைந்து-தரித்து, ஐந்தெழுத்து-பஞ் சாட்சரமாகிய மகாமந்திரத்தை, எளு-எண்ணுத, எல்-ஒளி, இயைந்த-அமைந்த, சிந்தாமணி-சீவகசிந்தாமணி என்னும் நூல், நெய்தல் அம்பறை-சாப்பறை, எல்-சூரியன், மழுக்கும்குறையச் செய்யும், மழங்கச் செய்யும், எம்பிரான்-சிவபெரு மான், துழாம்-துழாவுகின்ற, சொல்-புகழ், மாலியானபெரிய யானை, அழல்-நெருப்பு ஒளிபோலக் கொழுந்துகளைப் பெற்று விளங்கும், தே-இனிய, செல்-மேகம். விளக்கம்: அநபாயன் முடி பொன்னுலும் மணியாலும் ஆனமையின் ஒளி பொருந்தியதாயிற்று. ஆதலின், ஊரும்