பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/772

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 சிறுபறைப் பருவம் தன்னையாளுடைய பிரான் சரணுர விந்தங்கள் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம் பன்னு:தமிழ்த் தொடைமாலே பலசாத்திப் பரவைஎனும் மின்னிடையாள் உடன்கடி விளையாடிச் செல்கின்ருர் என்ற பாடலைக் காண்க. சுந்தரர் நரசிங்க முனை.அரையர் என்னும் மன்னரால் வளர்க்கப்பட்டு அரச போகத்தில் ஆழ்ந்திருந்தனர். அந் நிலையில் அவர்க்குத் திருமணம் கூடிற்று. மனப்பந்தர்க்குப் போகப் புறப்பட்ட நம்பியாருரது திருக்கோலத்தைப் புகலும் நம் சேக்கிழார், மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்னகர் விழவுகொள்ள நம்பியாரூரர் நாதன் தன்னடி மனத்துள் கொண்டு தகுந்திரு நீறு.சாத்திப் பொன்னணி மணியார் யோகப் புரவிமேல் கொண்டு போந்தார் என்று பாடுவாராயின் சிவமணம் கமழும் பாடல்கள் இவரது நூலில் உண்டு என்பதில் ஐயம் உண்டோ? இசைக் கருவிகள் பல இருப்பினும், எடுத்துக் கூறும் பெருமைக்குரிய இசைக்கருவி குழலும் வீணையும் ஆகும். "குழல் இனிது யாழ் இனிது என்ப" என்று வள்ளுவரும், ஏனை யரும் குழல் கொண்டும் யாழ் கொண்டும்” என்றும் குழல் வீணை கொடு கொட்டி” என்றும் இவ்விரண்டினேயே விதந்து கூறினர். இக்காலத்தில் யாழ் என்பதையே வீணே என்று கருதியுள்ளனர். அங்ங்னம் யாழும் வீணேயும் ஒன்றே என்று கருதுவதற்கு இல்லை. யாழ் வேறு, வீணே வேறு, 'இன்னிசை வினயர் யாழினர் ஒருபால்' என்று மாணிக்கவாசகர் வீணே யாழ் ஆகிய இவ்விரண்டையும் ஈண்டுத் தனித்தனிப் பிரித்துப் பாடிக் காட்டி இருப்பதைக் காண்க. தேவாரத் திருமுறைகளிலும் வீணே வேறு, யாழ் வ்ேறு என்ற குறிப்பே காணப்படுகிறது. 'பண்ணுெடு யாழ் வீணை