பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/777

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 695 மானினங்கள் மேய்ந்த புல்லும் கடைவாய் சோர மகிழ்ந்திருகண் ல்ை அமையப் பார்த்து நிற்க ஆனிரைகள் செவிநெறித்து முலைப்பால் சோர அகம்குழைந்து கன்றினுடன் நோக்கிற் றம்மா மாயவன்தன் வாயினிடை வேயைவைத்து மகிழ்ந்தினிதின் ஊதஎழுகீதம் கேட்ட ஆயர்மட வார்கள் எலாம் உருகி நெஞ்சம் ஆவிதளர்ந் தேஒன்றும் அறியார் ஆகி ஏயெனும்முன் குழல்ஓசை நெறியின் எய்தி, இடைது.வளக் கலைநெகிழ வளைகள் சோரத் தாயகுழல் அவிழஇமைப் போதின் முன்னர் துலங்குபர மன்தனைத்தான் சூழ்ந்தார் அன்றே கறந்தநிறை பால்கலசம் தரையில் வையார் கவிழ்ந்துடைய ஏறிந்தோடிக் கடிதில் சென்ருர் சிறந்த அனம் அருந்துகரம் நீரில் காட்டார் யங்கி.மனம் தடுமாற விரைவில் சேர்ந்தார் துறந்துதுயில் அனந்தலுடன் பாறி ஞர்கள் சோருெருவற் கிடுவமுன்னே துளங்கித் தம்மெய் மறந்தும்மதி மயங்கிவல்லை ஏகி ஞர்கள் மாலெழுவார் தமைத்தடுக்க வல்லார் யாரே என்று பாடி இருப்பதையும் படிக்கும்போது, குழல், "அவாங் குழல்' என்று அடை கொடுத்துச் சிறப்பித் திருப்பது பொருத்தம் அன்ருே! இவ்வாறே வீணையின் இசையும் விரும்பப்படுதலைச் சீவகசிந்தாமணிப் பாடலால் அறிந்து கொள்லாம், அண்ணவியாழ் நரம்பை ஆய்ந்து மணிவிரல்தவழ்ந்த வாறும விண்ணிய இலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி மண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோந்தார் பண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தர்ர்