பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/786

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T04 சிறுபறைப் பருவம் மேன்மைப் பதிகத் திசையாழில் இடம்பெற் றுடனே மேவியபின் பானற் களத்தார் பெருமணத்தி லுடனே பரமர் தாளடைந்தார் எனத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முத்தி பெற்றமை யினையும், . தேவர்.பிரான் திருத்தொண்டில் கோச்செங்கட் செம்பியர்கோன் பூவலயம் பொதுநீக்கி ஆண்டருளிப் புவனியின்மேல் ஏவியநல் தொண்டுபுரிந் திமையவர்கள் அடிபோற்ற மேவினர் திருத்தில்லை வேந்தர் திரு வடிநிழல்கீழ் என்று கோச்செங்கட் சோழ நாயனர் முத்தி பெற்றதையும் பாடிய பாடல்களால், முத்தி தரும் கவி பாடிய சிறப்பைக் காண்க. முத்தி என்பது அத்தமில் இன்பத்து அழிவில் வீடாகும். ஒதுபு என்பது செய்பு என்னும் வாய்பாட்டு வினை எச்சமாகும். இதுபோலப் பல எச்ச வாய்பாட்டுச் சொற்கள் உண்டு. செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின் வினை எச் சம்பிற ஐந்தொன் முறுமுக் காலமும் உணர்த்தும் என்னும் நன்னூல் சூத்திரத்துள் காண்க. திருத்தொண்டர்புராணத்துள் பத்தி தரும் பாடல்கள் உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 'பக்திச்சுவை நனிச் சொட்டச்சொட்டக் கவி பாடிய பாவலர்” என்று முன்பே திரு பிள்ளை அவர்கள் பாடியுள்ளனர் அல்லரோ? பெரிய புராயணப் பாடல்கள் பெரும்பாலும் பத்தித் தரும் பாடல்களைக் கொண்டதுதானே! (88)