பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/790

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*08 சிறுபறைப் பருவம் என்ற இடத்து, நெடுமாறனுக்குத் திருஞானசம்பந்தர் திருப்பெயர் திருமந்திரமானதையும், திருநாவுக்கரசர் திருப் பெயரையும் திருமந்திரமாக அப்பூதி அடிகளார் கொண்டி ருந்ததைச் சேக்கிழார், வடிவுதாம் காணு ராயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பி ரானர் அருளும்கேட் டவர்நா மத்தால் படிநிகழ் மடங்கள் தண்ணிர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள முடிவிலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் என்று பாடியுள்ளனர். இச் செய்யுட்கு விளக்கம்போல நால்வர் நான்மணிமாலை நூலாசிரியர், உற்ருன் அலன் தவம் தீயின் நின் முன்அலன் ஊண்புனலா அற்ருன் அலன் நுகர் வும் இரு நாவுக் கரசெனும்ஒர் சொற்ருன் எழுதியும் கூறியுமே என்றும் துன்பில்பதம் பெற்ருன் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே என்று பாடி இருப்பதையும் காணவும். திருநாவலூரர் தம் பெற்ருேர்களால் நம்பி ஆரூரர் என்று பெயரிடப்பட்டவர். அங்ங்னம் பெயரிட்ட நிலையினைக் குறிக்க வந்த இடத்துச் சேக்கிழார், 'தம்பிரான் அருளினலே தவத்தினுல் மிக்கோர் போற்றும் நம்பியாரூரர் என்ற நாமமும் சாற்றி” என்று பாடினர். இங்கனம் பாடியதற்குக் காரணம், இத் திருநாமத்தையே மகா மந்திரமாகக்கொண்டு எண்வகைச் சித்திகளைப் பெருமிழலேக் குறும்பர் பெற்ருர் ஆதலின், இப்பெயரை மந்திரமாகக் கொண்டார் என்பதை, நாளும் நம்பி ஆரூரர் நரமும்,பயின்ற நலத்தாலே _ ஆளும் படியால் அணிமாதி:சித்தி ஆன அணைந்ததன்பின்' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, இம் மூவரும் நனி வில் இடும்புகழ் உடையார் என்பது உண்மை அன்ருே?