பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/793

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 711 மான, வயங்குறு-விளங்குறும், கண்டம்-எ ழு த் தா னி மாண்பு-மாட்சிமை, ஆர்-பொருந்திய, பிந்து-எழுத்தின் மேல்புள்ளி, பிந்து வரைந்த எழுத்து-மெய் எழுத்து, பெயராது - போகாதபடி, விட்டுவிடாதபடி அக்கரம் - அழியாதது, தேற்றுபு-தெளியும்படி செய்து, பெட்கும்-கற்க விரும்பும், மாருதே-ஒய்வின்றி. வேறுபடுத்தாமல். விளக்கம்: சேக்கிழார் பெருமாளுர் பெரிய புராணம் இயற்றத் தில்லை வந்துற்றனர். இறைவன் திருவருளால் புராணத்தைப் பாடவும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அனபாயன்; அப்புராணம் எந்த அளவில் முடிந்துளது என் பதன அடிக்கடி ஆளே ஏவி அறிந்து வருமாறு செய்தனன். இதன் கருத்து அப்புராண்த்தைச் செய்யுள் வடிவில் காணவும், கேட்கவும் அவன் கொண்டிருந்த பேராவா எந்த அளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பதாகும். அனபாயன் அடிக்கடி தூதரை ஏவிப் புராணம் எந்த அளவு என்று முடிந்துளது அறிய அவாவுற்றனன் என்பதை, சேவை காவலர் புராண காதைதொகை செயநி னேந்தைமை அகன்றபின் யாவர் தாம்அரு கிருந்த பேர்கள்கதை சென்ற தெவ்வளவி ருந்ததெங் காவ தென் இவைகள் அறிய வேண்டும தறிந்து வாரும்என வளவர்கோன் ஏவி னனுரிய தூதர் தூதர் அறி யாமல் ஒற்றரையும் ஏவினுன் என்று உமாபதியாரும் உரைத்தருளினர். இக்கருத்தினேயே முதலடிகள் உணர்த்துகின்றன, சேக் கிழார் பெரிய புராணத்தை எழுதத் தொடங்கிய மணிக் கால் மண்டபத்தை இன்னும் தில்லையில் காணலாம் திருவாதிரை நாளில், ஆணித் திருமஞ்சன நாளில் நடராசப் பெருமானுக்குத் திருமுழுக்கு அலங்காரம் முதலியன நடை பெறும் இடம் இதுவே ஆகும். கையேடு ஈண்டுப் பனை ஓலை ஏடுகளாகும். தொண்டர் புராணத்தை எழுதும் வாய்ப்பினே