பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/810

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 சிறுதேர்ப் பருவம் தேவாரத்தில் சிறப்பிக்கப் பட்டமையின், ஈண்டும், "முறியும் மலரும் பொருவு திருமேனி” என்றனர். உமை யம்மையார் இறைவ்னத் தழுவி வழிபட்டதைச் சுந்தரர், "எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல் உள்ளத் துள்.கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளம் காட்டி வெருட்டி அஞ்சி வெருவிஒடித் தழுவ வெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்ற வாறே என்று பாடினர். உமை அம்மையார் இறைவனைக் காஞ்சியம் பதியில் வழிபட்டது, தாம்மட்டும் இறையருள் பெறு வதற்கு மட்டும் இன்றி, உலகமும் திருவருள் பெறப் பூசை யியற்றினர் என்பதைச் சேக்கிழார், ஆன தொல்நகர் அம்பிகை தம்பெரு மானை மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட் டுன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த மேன்மை பூனடஅப் பெருமையை அறிந்தவர் விளம்பில்" என்று போற்றிப் புகழ்ந்தமையின் 'உலகுய்ய” என்றனர். தழுவுபு என்பது செய்பு என்னும் வாய்பாட்டு வினை எச்சம், கம்பை காஞ்சியில் உள்ள ஒரு நதி. இது வலிமை மிக்கது என்பதைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்தப் படலப் பாடல்களால் அறியலாம், மிடைவானவர் திசைகாவலர் புவிமேலவர் காணுTஉக். கடைநாள்.அணு கிற்ருல் என வெருவிக்கலுழ் கண்ணிர் இடையாறென விரவக்கொடு வேகத்தொடும் எவ்வெப் புடைநீர்களும் உடனுகிய கம்மைப்புனல் வருமால் படலைக்கரு முகிலும்இடை இடையேபட ரொளிசேர் தொடலைக்கதிர் உடுவும்துவ ளுறுபாசடை விரவும் இடையில் திகழ் மலரும்என இலகக் கனமும் உட் படமிக்கெழு பரவைப்புனல் பயமுற்றிட வருமால்