பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/815

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் ‘ig3 மாறுகொள் ஐம்பால் உமைவிழிக் கோடி தன்னிடை வரும்முறை யானும் ஏறும்அத் திருப்பெயர் எம்மெரு மாட்டிக் கென்றெடுத் தியம்புவர் உணர்ந்தோர் என்று கூறுகிறது. இறைவி இறைவன் திருக்கண்களை மூட, அக்கண் சந்திர சூரியர்கட்கு ஒளிதரும் ஒளியுடையன ஆதலின், அவ்வெம்மை யால் அம்மையார் கைகளில் வியர்வை தோன்ற, அவ் வியர்வை கங்கையாருகப் பாய, அக்கங்கையினிடத்து வேளாளர்கள் உதித்தனர் என்பது புராணம். இதஞல் இறைவனது முக்கண்களும் சூரிய, சந்திர, அக்கினிகட்கு ஒளி தருவன என்பதை நால்வர் நான்மணிமாலை அழகுற, கண்களோ ஒன்றுகாலையில் காணும் மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும் பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும் என்று கூறுகிறது. வேளாளர்கள் நன்னெறியும் நலனும் உடையவர்கள் என்பது உண்மை. வெலும் புகழ்ச்சி அன்று. இதனைப் பரஞ்சோதியார், வழுக்கறு வாய்மை மாண்பும் கங்கைதன் மரபில் வந்த விழுக்குடிப் பிறப்பும் மூவர்ஏவிய வினைகேட் டாற்றும் ஒழுக்கமும் அமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையும் குன்கு; இழுக்கறு மேழிச்செல்வர் வளமறு கியம்ப லுற்ரும் வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கும் (ஒசை அருகிருந் தடிசில் ஊட்டி முகமன் நன் கறையும் ஒசை உரை பெறு தமிழ்பா ராட்டும் ஒசைகேட் டுவகை துள்ள இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஒசை