டாக்டர் - இராசமாணிக்கனார்
o 133
7. நாயன்மார் பாடலை கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் திறமையும் சேக்கிழார் பெருமானுக்கு உண்டு. சான்றாக ஒன்று கூறுதும் அப்பர். நமிநந்தி அடிகள் சிறப்பைத் தமது திருவாரூர்ப் பதிகத்தில்,
"ஆராய்ந்த தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் (அகத்தடக்கி."
என்று தொடங்கிப்பாடிப் பாராட்டியுள்ளனர்.சேக்கிழார் இதனை நினைவிற்கொண்டு அந் நமிநந்தி அடிகள் புராணத்தில்,
நீறு புனைவார் அடியார்க்கு தெடுதான் தியதியாகவே வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் ஏறு சிறப்பரின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் - (காணி யெனும்
பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார். என்று பாடியுள்ளார்.
8. சேக்கிழார் பல இடங்களில் திருப்பதிகங்களின் உட்குறிப்பை எடுத்துக் காட்டுவர். - -
9. பெரிய புராணம் தேவாரத்திற்கு உரை காணப் பெருந்துணையாக இருப்பது என்னலாம். சேக்கிழார். வையை யாற்றில் எதிர்சென்ற ஏட்டில் அடங்கிய திருநள்ளாற்றுப்பதிகத்தின் பொருளை மிகவும் விரிவாகக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.
திருவாசகம். சேக்கிழார் திருவாசகத்திலும் சிறந்த புலமை யுடையவர் என்பது தெரிகிறது. மன்னிவாசகர், சண்டீசர் வரலாற்றைக் கூறி,
"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்."
என்று கூறியுள்ளார். சேக்கிழார் இதனை அதே சண்டீசர்