பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ు இ. ராம நாத புரம் அரண்மனை. அந்தப் புரத்தின் மேற்கு மதிலையொட்டி அமைந்த நந்தவனம். தெற்கே இருந்து தவழ்ந்து வந்த மாலைத் தென்றல் அங்குள்ள மலர்களின் மனத்தைப் பறித்து அந்தப் பகுதி முழுவதும் பரப்பி மணம் கொள்ளச் செய்தது. ஏற்கனவே அங்கு அமர்ந்து தனிமையை நுகர்ந்துகொண்டிருந்த மன்னரை சந்திக்க மகாராணியார் சேது.கங்கை