பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A) o பொழுது புலர்ந்து ஒரு நாழிகை நேரம் ஆகிவிட்டது. இராமநாதபுரம் கோட்டைக்குள் நீராவி மாளிகை முன்பாக ஒரு சிறு கும்பல் கூடியிருந்தது. நேரம் ஆக ஆக அந்தக் கூட்டம் பெரிதாகிக் கொண்டிருந்தது. புரட்டாசி மாத சூரியனின் இளங்கதிர்கள் கோட்டை மதிலைத் தாண்டி இன்னும் மேலே வரவில்லை. அந்தக் குளுமையான இளநேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த மல்லர்களும், சிலம்பாட்டக்காரர்களும் தங்களது