பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 הסIFTה .כרIL5 .םBLםTTכהכ தேவன் கடற்கரையை நோக்கிச் சென்றான். ஒரிடத்தில் நின்று கொண்டு தனது துவாலைத் துண்டை தலைக்கு மேலே பிடித்து மெல்ல வெள்ளை வீசினான். சில நிமிடங்களில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த வள்ளத்தின் நங்கூரத்தை இழுத்து கப்பல்காரர் வள்ளத்திற்குள் போட்டதும், வள்ளத்தில் இருந்தவர்கள் கைகளை சைகை காண்பித்தனர். வள்ளம் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டது. இப்பொழுது தனுக்காத்த இராமுத் தேவன் கோவில் வாசலுக்கு வந்த பொழுது கோவிலுக்குள் இருந்து வந்த பாட்டின் ஒலியும் நின்றது. " வீரசிம்மா பூஜை முடிந்து விட்டதா?" பெரியவர் கேட்டார். m - * = - == # . II. == I. ஐயா நமஸ்காரம். எல்லோரும் வாருங்கள்' என்று மூவரையும் வரவேற்றார். இளந்துறவி. அனைவரும் கருவறையும் அர்த்த மண்டபமும் ஒன்றாக அமைந்த அந்த சிறு கோயிலின் நடையில் அமர்ந்னர் "ஒரு வாரத்திற்கு முன்னர் மதுரை சென்று இருந்தென். திரும்பும் வழியில் பெருநாழிச்சத்திரத்தில் தங்கி இருந்த பொழுது ஒலைகள் அனுப்பி கருநீலக்குடி, பருத்திக்குடி, கிடாத்திருக்கை, ஆப்பனுார் அனைத்து நாட்டு தலைவர்களை இன்று மாலைக்குள் இங்கு வந்து சேருமாறு தவகல் கொடுத்விட்டு வந்தேன்' இளந்துறவி சொன்னார். "ரொம்ப சரி. இரவு வரை காத்திருப்போம் " என்று சொல்லிய பெரியவர், மதுரையில் ஏதாவது விஷேசம் உண்டா ? என்று கேட்டார்.