இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(A) (R ತ್ತಿ இராமநாதபுரம். நீராவி அரண்மனையின் அருகே அமைந்துள்ள சவுக்கை யில் ஒரு சிறு குழு ஒன்று அந்தக் காலை நேரத்தை பயனுள்ள பொழுதாகக் கழிக்கக் காத்துக் கொண்டிருந்தது என்பதை அவர்களது மகிழ்ச்சி மிக்க முகங்களில் இருந்து தெரிந்தது. அவர்களில் அநேகம் பேர் தங்களது வேட்டியை பஞ்சகச்சமாக இரு கால் களிலும் தனித்தனியாக சுற்றியவாறு தங்களது இடுப்புகளில் பிணைத்தும் நீண்ட துண்டுகளை போர்வையாக உடம்பில் போர்த்