பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 எஸ். எம். கமால் "உத்தரவு மகாராணி" பணியாளர் மான் குட்டிகளுடன் சென்றார். மகாராணியார், கலாதேவி உரையாடல் வழக்கம்போல் சிரிப்பும் ஏளனமுமாக தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் அளவிடற்கரிய அன்பும் வாஞ்சையும் பரிமளிக்கும் இந்த இன்பச் சூழல் விரைவில் வேதனையும் விரக்தியும் நிறைந்த துன்ப நாட்களாக அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிடும் என யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. இதுதான் விதியின் விளையாட்டு என்று விவரிக்கப்படுகிறது. வேறு எப்படிச் சொல்வது? ఖీ ఖీ శ్లో