பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 245 வருவதாக இலை வந்துள்ளது. அந்த பெண்மணிக்கும் ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம்." "மகிழ்ச்சி அப்படியே செய்யலாம்." மகாராணியார் ஒப்புதல் அளித்தார். "கலாதேவிக்கு முத்தாம்பாள் போட்டி இல்லை. கலாதேவியுடன் யார் போட்டியிட முடியும் கலாதேவியைத் தவிர்த்து" என்று சொல்லி மன்னர் சிரித்தவுடன், கலாதேவியும் மகாராணியாரும் மன்னரது பேச்சை ரசித்துப் புன்னகை செள்தனர். "மகாராணியார் சாப்பாடு விசயமாக வைத்தியர் ஏதாவது கட்டுப்பாடு விதித்து இருக்கிறாரா?" மன்னர் கேட்டார். "ஒன்றும் இ r II "அப்படியானால் இப்பொழுது நாம் விருந்து மண்டபம் செல்லலாமே! மகாராணியாரது கையினால் சாப்பிட்டு மூன்று கிழமைகளாகப் போகிறது." சிரித்துக்கொண்டே ராணியார் தானாதிபதியை நோக்கினார். அவர் உடனே சாப்பாடு பரிமாறும் ஏற்பாட்டைக் கவனிக்க சமையல்கட்டிற்கு விரைந்து சென்றார். {} {} {}