பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A) மதுரை சொர்க்க விலாசம் அரண்மனை முகப்பில் திருமலை மன்னரது பிரதானி ராயசம் மற்றும் உயர் அலுவலர்களும் காத்திருந்தனர். நான்கு குதிரைகளில் வீரர்கள் பின் தொடர அழகிய அரபு நாட்டுக் குதிரை ஒன்றில் வந்த ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர், அரண்மனையின் ஆசார வாசலில் இறங்கி கம்பீரமாக மாளிகைக்குள் நடந்து சென்றார். இருபுறமும் நின்றுகொண்டு இருந்த பெரிய யானைகள் தங்களது துதிக்கைகளை மேலே உயர்த்தி,