பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 எஸ். எம். கமால் நாட்டின் மீதான படை எடுப்பாரோ என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். பைத்தியக்காரனது நடவடிக்கைகள் விபரீதமாகத்தான் இருக்கும்." "பெரும்பாலும் தஞ்சைப்படையெடுப்பின் முடிவை ஒட்டி நமது நாட்டின் மீதான படையெடுப்பு அமையலாம். எதற்கும் தளகர்த்தரை எச்சரிக்கை செய்துவைக்கிறேன். தஞ்சைக்கும் மதுரைக்கும் நமது உளவாளிகள் சென்று வந்த பிறகு இன்னும் தீவிரமாக இது விஷயமாக ஆலோசிக்கலாம்." "ஆமாம். இன்றைக்கே உளவாளிகள் புறப்படட்டும். வழக்கமான அகரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்." "சமுகம் உத்தரவு" "இன்னொரு முக்கியமான விஷயம். இந்த ஆண்டு சாகுபடி எப்படி இருக்கும் என்பதற்கு நமது பாளையக்காரர்களது அறிக்கைகள் பெறவும். நமது நாட்டை இறையாயிரம் கொண்டான் தானியக்கிடங்கில் தான்யங்களின் இருப்பையும் சரிபார்க்க வேண்டும். அத்துடன் நமது ஆயுதச் சாலை இருப்பதயும் சரிபார்த்தல் அவசியம்." "உத்திரவு" பிரதானி அடக்கத்துடன் பதில் சொன்னார். "திருப்புல்லாணிக் கோயில் திருப்பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதை நாளை நேரில் பார்த்து வாருங்கள்." "சமுகம் உத்திரவு. நேற்று முன்தினம் அந்த கோயில் பேஷ்கார் இங்கு வந்திருந்தார். கல்தச்சர்கள் நன்றாக பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்." II --- , TT சரி. நாளை பார்க்கலாம் "உத்திரவு."