பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 எஸ். எம். கமால் "ஆமாம் இரவு முழுவதும் தூங்காமல் பஜனைசெய்து பிரார்த்தனை செய்து கொண்டும், ஜக்கம்மாவிடம் நேரில் பேசுவதுபோல் அலறிக்கொண்டும் இருக்கிறான் என காவலாளிகள் சொல்லுகின்றனர்." என தளகர்த்தர் கூறினார். "மனநோயாளி என்பவன் ஏறத்தாழ பைத்தியக்காரன் போன்ற நிலையில் உள்ளவன்தான். ஆதலால் இவனுக்கு உறக்கம் வருவதில்லை. மனமும் மூளையும் தளர்ச்சியடைந்தால்தானே உறக்கம் வரும். இன்னும் சில நாட்கள் இங்கேயே இவன் இருக்கட்டும். அவன் சொல்லும் தகவலை தெரிந்து கொண்டு அவனைப் பழஞ்சிறைக்கு மாற்றம் செய்யலாம்" என்று சொல்லிய பிரதானி ஏதோ நினைத்தவராக "இவனை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் இராமேசுவரம் சென்று மகாராஜாவைச் சந்தித்துவிட்டு ஒரு வாரத்தில் வந்துவிடுகிறேன்." "நல்லது." என்று சொன்ன கோட்டைத் தளபதி பிரதானியின் அலுவலகம் வரை வந்து விட்டுவிட்டு கோட்டை வாசலில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றார். @鬱鬱