பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A) ஒ இப்பொழுது அதே திருமலை நாயக்கரது சிங்காசனத்திற்கு பேராபத்து எழுந்தது. நாயக்கர் நோயினால் படுத்த படுக்கையாக நலிவுற்ற நிலையைப் பயன்படுத்தி மைசூரில் இருந்து கன்னடப்படை மதுரையை நோக்கி அணிவகுத்து வந்து கொண்டிருக்கும் செய்தி மதுரைக்கு எட்டியது. மதுரை மண்டலத்தில் எழுபத்து இரண்டு பாளையக்காரர்கள் இருந்தனர். அவர்களின் வலிமை வாய்ந்த பாளையக்காரர் ஒருவரிடம் மதுரைப் படைகளின் பொறுப்பைக்