பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கல்வெட்டுக்கள் குறிப்பிடுவன ஆகும். இந்தத் திருப்பணியில் சோழமண்டலத்தைச் சார்ந்த நாகூர் நகரின் வணிகர்-கோமுட்டி செட்டியார் உதவிய செய்தியும், இந்த கல்வெட்டு வாசகங்களில் அமைந்துள்ளன. கால நீட்சியால் இந்தக் கல்வெட்டுக்கள் அழிந்து விட்டதால் அவைகளில் கண்ட முழுமையான வாசகத்தை இங்கு வெளியிட முடியவில்லை. ஆனால் இந்தக் கல்வெட்டினை ஆங்கில நாட்டு அறிஞர் பெர்கூசன் என்பவர் படியெடுத்து வெளியிட்டுள்ளார். 1. James Fergusson-History of India and the great eastern Architecturee- (1881) Vol 2