பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சேதுபதி மன்னர்களது அறக்கொடைகளைத் தெளிவாகக் கூறுகின்ற இந்த நூலினை வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். தமிழக வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் டாக்டர் திரு.எஸ்.எம்.கமால் அவர்களது இந்த ஆக்கத்தினை வரலாற்று ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகிறோம். சேது மன்னர்களது வரலாற்றின் ஒரு பகுதியான இந்த நூல், மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையில் (ஆசிரியரால் தொகுக்கப்பெற்று) முதன் முறையாக வெளியிடப்படுவதால் வாசகர்களது கவனத்தை மிகுதியாக ஈர்க்கும் என்று நம்புகிறோம். சேதுநாட்டு வரலாற்று மையம் மற்றும் சர்மிளா பதிப்பகத்தினர்