பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 45 திருப்புல்லாணி திருக்கோயிலுக்கு வழங்கிய இரண்டு சர்வ மானியப் பட்டயங்களில் இருந்து (செப்பேடு எண். 38. 59) தெ Ոմ) ,'יוגי (ו இந் !", ச் செய் கி , ள் இதுவை II எந்த GYIII GuII ற்று ஆசிரியாாலும் வெளிப்படுத்தபடவில்லை. தமிழக வரலாற்றிற்கு இவை புதியனவாகும். சிவகாமி நாச்சியார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சேதுபதிகளது கொடி வழியுடன் இதனை ஒப்பு நோக்கினால் கூத்தன் சேதுபதி தொடங்கி இராமநாதபுரம் அரிய னையேறிய அனைத்து மன்னர்களுக்கும் நேர்வா ரிசு இல்லை என்பது வியப்பளிக்கும் உண்மை விளங்கும். சேதுபதி சீமை இராமநாதபுரம் சேதுபதிகளது சீமை, மறவர் சீமையை மட்டும் கொண்டதாக இல்லாமல் வடக்கிலும் வடகிழக்கிலும் சோழ மண்டலத்திற்குள்ளும் விரிந்து இருந்தது. இந்த உண்மையை, ரெகுநாத திருமலை சேதுபதி, ரெகுநாத கிழவன் சேதுபதி, முத்துவிசைய ரெகுநாத சேதுபதி மன்னர்கள். திருவா வடுதுறை ஆதின கர்த்தர்களுக்கும், திருப்பெருந்துறை பண்டாரத் திற்கும் திருவாரூர் தியாராசசுவாமி திருக்கோயிலுக்கும் வழங்கிய செப்பேடு (இந்த நூலின் தொகுப்பு எண்கள் 17,19:22,42.மற்றும் புதுக்கோட்டை சீமை வரலாறு கல்வெட்டுக்கள் வழியும் அறிய, முடிகிறது. இதனைப் போலவே இந்த மன்னர்களது நாட்டின் கிழக்கு எல்லை இலங்கை நாட்டு மன்னர் முத்துசலாபத்துறை வரை தொடர்ந்து இருந்தது. தொன்று தொட்டு வந்துள்ள மன்னர் முத்து சலாப உரிமையினின்றும் இராமேசுவரம், திருப்புல்லாணி, ஆவுடையார் கோவில்களுக்கு தங்கள் படகுகள் மூலம் மன்னர் சலாபத்தில் முத்துக்குளித்துக் கொள்வதற்கு சேதுபதிகள் அளித்துள்ள செப்பேட்டு வாசகம் சான்றாகஉள்ளன. சேதுபதிகளின் சீமை தெற்கே வேம்பாற்றுவரை இருந்த தை கிழவன் சேதுபதி ஆட்சிக்காலப் பட்டயமொன்றும் செல்லமுத்து சேதுபதி கி.பி. 1759-ல் போகலூர் கனி சேர்வை என்பவருக்கு கன்னிராசபுரம் என்ற ஊரினைத்தானமாகவழங்கிய செப்பேடும் தெரிவிக்கின்றன . 11. Pudukotti state inscriptions No. s. 870, 871, 872. 876 878. 901, 934, 12. Tamilnadu Archieves Madurai Dist Vol.