பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

81

10. Record of English East India Company

11. Topographical list of inscriptions 1906, Vol II by K.V. Rangacharya

இவை தவிர கி.பி. 1604 முதல் 1792 வரை சேது மன்னர்கள் வழங்கிய சர்வமான்ய சாசனங்களான செப்பேடுகளும் கி.பி. 1622 முதல் 1898 வரையிலான கால அளவில் சேது மன்னர்கள் வெட்டுவித்த கல்வெட்டுகளும் ஆகும். இந்த ஆவணங்களில் சேது மன்னர்களது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. எடுத்துக்காட்டாக திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் கி.பி. 1674லும், கி.பி. 1678லும் நிறைவுபெற்றதாக சில ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். உண்மையில் அவரது ஆட்சிக்கால முடிவு கி.பி. 1676 ஆகும். மேலும் இந்த மன்னர் சேதுபதி பட்டம் சூட்டிக் கொண்டபோது கூத்தன் சேதுபதியின் மகன் தம்பித் தேவர்க்காக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தலையிட்டுச் சேது நாட்டை மூன்று பிரிவுகளாகப் பிரிக்குமாறு வலியுறுத்தி வந்தார். இதன் காரணமாகப் பிரிவினை செய்யப்பட்ட சேது நாட்டில் காளையார் கோவில் பகுதியைத் தம்பித் தேவர் தலைமையிடமாகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்துள்ளார். இதனைப் போன்றே இன்னொரு பகுதியான அஞ்சுகோட்டை பகுதியை நாராயணத் தேவர் மகன் தனுக்காத்த தேவர் சில காலம் ஆட்சி செய்ததையும். மேலே கண்ட நூல்கள் குறிப்பிடத் தவறிவிட்டன.

இன்னொரு செய்தி, ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1710-ல் மரணமடைந்ததும் அவரது தங்கையின் மகனான திருவுடையாத் தேவர் என்பவர் சேதுபதிப் பட்டத்தினைப் பெற்றார் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் திருவுடையாத் தேவர் என்ற முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1710-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவரது தமையனார் முத்து வயிரவநாத சேதுபதி கி.பி. 1710-லேயே சேதுநாட்டின் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்தார் என்பதை அவரது கி.பி. 1710. கி.பி. 1712 ஆண்டைச் சேர்ந்த செப்பேடுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் முத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி. 1713-ல் தான் சேது நாட்டின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது. கி.பி. 1713-ல் இந்த மன்னர் வழங்கிய முதல் செப்பேடும் இதை உறுதி செய்கிறது. இந்த மன்னரது மரணம் பற்றிய சரியான ஆண்டு இந்த நூல்களில் காணப்படவில்லை. இதனைப் போன்றே கிழவன் சேதுபதியின் மகனான பவானி சங்கரத் தேவர் கி.பி. 1725-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து கி.பி. 1727 வரை ஆட்சி செய்ததைப் பற்றிய செய்திகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த மன்னர் திருக்கோயில்களுக்குசே. - 6