இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வற்றைத் தந்து உதவிய அன்பர்கள் பலருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
மற்றும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தளராத தொண்டுசெய்து இறவாப் புகழ் கொண்ட சேது மன்னர்களின் வரலாற்றினை வெளியிட வேண்டும் என்ற பெரு விருப்புடன் என்னைப் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்ததுடன் இந்த வெளியீட்டிற்கு பல்லாற்றானும் உதவியும் ஒத்தாசையும் நல்கிய தஞ்சாவூர்த் தமிழ்ப் பேராசிரியர் திரு மது.ச. விமலானந்தம் அவர்களுக்கு எனது ஆழிய நன்றி.
இந்த நூலின் மெய்ப்புக்களைப் பொறுமையுடன் இரவு பகலாக மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துச் செம்மை செய்துதவிய இராமநாதபுரம் அரசினர் சேதுபதி கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. மை. அப்துல்சலாம் அவர்களுக்கும் எனது ஆழிய நன்றி.
எஸ்.எம். கமால்
நூலாசிரியர்
நூலாசிரியர்