123 ஆகிய இரண்டு செய்திகளே பதிற்றுப்பத்துள் இடம் பெற்றுள்ள பழைய கதைச் செய்திகளாகும். இவ்விரு இடங்களிலும் சேர அரசர் வீரத்திற்கும் கொடைக்குமாகப் பாராட்டப்பட்டுள்ளார்கள். வாழ்த்து வகைகள் பதிற்றுப்பத்துப் பாடிய புலவர் பெருமக்கள் சேர மன்னரைப் பலவாறு வாழ்த்தினர். ‘'நீ உன் முன்னோரைப் போலப் புகழை நிலைநிறுத்தி வாழ்வாயாக." கடலக வரைப்பினிப் பொழில்முழு தாண்டகின் முன்றிணை முதல்வர் போல நின்றுரீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ லியரோவில் வுலகமோ டுடனே. -இரண்டாம் பத்து 4: 19-22. உலகத்தார் நலனுக்காக நீ வாழ்வாயாக." வோ ழியரில் வுலகத் தோர்க்கென. – 2; 5:24. உன்னைப் பெற்றெடுத்த தாயின் அழகிய வயிறு வாழ்வதாகுக.' வயிறுமா சிலீஇயரவ னின்ற தாயே. - — 2; 10:28. நீ நின் மனைவியோடு ஆயிரம் வெள்ளம் காலம் வாழ்க..' வேயுறழ் பணைத்தோ ளிவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே. -மூன்றாம் பத்து 3; 1:38, :நின் வளம் வாழ்வதாகுக.' பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. — 3; 4:30.
பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை