பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சேரர் கொடை வளம் வேந்தர்க்கு வெற்றியை விளைவிப்பது வீரம், புகழி னையும் மாறா மனமகிழ்ச்சியினையும் அளிப்பது ஈரம் என்னும் கொடைப்பண்பு ஆகும். தமிழ் மன்னர்பால் வீரமும் ஈரமும் குறைவறக் குடிகொண்டிருந்தன. வீரம் விளைவித்த மன்னர்களே ஈர நெஞ்சம்-இரவலர்பால் இளகிய நெஞ்சம் வாய்ந்த மன்னர்களாக விளங்கிக் கொடைப் பண்பைப் போற்றியிருக்கிறார்கள். தொல் காப்பியனார் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' ானச் சேர சோழ பாண்டியர் ஆண்ட தமிழகத்தைக் குறிப் பிட்டுள்ளார். மேலும், திருவள்ளுவர்தம் வழங்குவது உள்வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று. -திருக். 955. என்ற குறளுக்கு உரையெழுதப் புகுந்த பரிமேலழகர், பழங்குடி என்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடி' " என்று உரையெழுதி, தொன்றுதொட்டு வருதலாவது, சேர சோழ பாண்டியர்' என்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்' என்று விளக்க வுரையும் கண்டுள்ளார். தொல்காப்பியனார் கருத்தும், பரிமேலழகரின் திருக்குறள் உரை விளக்கமும் பண்டைத் தமிழ் அரசரின் ஈகைத் திறத்தினை எடுத்தியம்ப வல்லன. வாகும். திருவள்ளுவர் ஈகை' என்றே ஒர் அதிகாரம் வகுத்துள் ளார். வறியார்க் கொன்றிவதே ஈகை' என்றும், மேலுலகம் இல்லெனினும், ஈதலே நன்று' என்றும் ஈதலின் சிறப்பினை நன்கு விதந்தோதியுள்ளார்.