பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அக்குரன் அனைய கைவண் மையே. —2; 4:7. படையேருழவன் என்றும் பாடினிவேந்தே என்றும் வயவர் வேந்தே என்றும், :பரிசிலர் வெறுக்கை' என்றும், பசும்பிணி மார்ப என்றும் கூறிச் சேர வேந்தனின் வீரப் பண்பினையும் ஈரப்பண்பினையும் ஒருங்கே புலப்படுத்து கின்றார் புலவர். இம்மண்ணுலகில் வாழ்கின்ற உயிர்களுக்குத் தயங்காது வழங்குதலில் அவன் வல்லவனாய் உள்ளான் என அவன் கைவண்மையை மேலும் புகழ்கின்றார் புலவர். o மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக் கைதண்டாக் கைகடுந் துப்பில் புரைவயிற் புரைவயிற்_பெரிய நல்கி. -இரண்டாம் பத்து ; 5:35-37. வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப என்ற தொடரால் குமட்டுர்க் கண்ணனார் சேரனின் ஈர நெஞ் சத்தினை இன்புறக் கிளத்தி மகிழ்கின்றார். புலவர் புகழப் புகழைத் தன்பால் நிலைநிறுத்தி வாழ்கிறான் சேரன். கூத்தர்க்குக் குதிரையும், யானையும் தேரும் குறைவற வாரி வழங்குகின்றான் சேரன். புலவர் ஏத்த ஓங்குபுகழ் கிறீஇ விரியுளை மாவும் களிறும், தேரும் வயிரியர் கண்ணுளர்க்கு ஒம்பாது வீசி. -இரண்டாம் பத்து 10:14-16. இவ்வண்ணம் வாரி வழங்கும் வள்ளற்றன்மையைக் கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சு என்று போற்றிப் புகழ்கின்றார் புலவர். வயிறு பசி கூர ஈயலன் என்ற தொடரும் சேரனின் மாண்ட கொடைப் பெருமை யினையே குறிப்பிடுகின்றது. இவற்றிற்கெல்லாம் முடி மணியாக, மாரி பொய்க்குவ தாயினும் சோ லாகன் பொய்யலன் நசையே. -இரண்டாம் பத்து 8:11-12.