பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அடுத்தபடியாக, களங்காய்க்கண் ணி நார்முடிச் சேரலின் கொடைப் பண்புகளாகக் காப்பியாற்றுக் காப்பி யனார் குறிப்பிடுவனவற்றைக் காண்போம். நான்காம் பத்தின் முதற்பாடலிலேயே சேரவேந்தனை வரையாத வள்ளன்மை மிகுந்த வண்டன் என்பானோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார் புலவர். வெண்டிரை முந்நீர் வளைஇய வுலகத்து வண்புகழ் கிறுத்த வகைசால் செல்வத்து வண்டன் அனையைமன் நீயே. -நான்காம் பத்து; 21-23. காப்பியாற்றுக் காப்பியனார் நார்முடிச் சேரலைப் * பரிசிலர் வெறுக்கை என்றும் பாணர் நாளவை என்றும் கூறி, அவன் தன் அளக்கலாகாக் கொடைப் பண்பினைக் காட்டுகின்றார். தனக்கு இனிமை நிறைந்த பொருள்கள் கிடைத்தாலும் அதனைத் தானே தனித்து, நுகராது, பிறருக்குப் பகுத்துத் தந்து பாண் கடன் ஆற்றுகின்றான் நார்முடிச்சேரல் என்பதனை நயம்பட மொழிகின்றார் புலவர். இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம் தருகென விழையாத் தாவில்நெஞ் சத்துப் பகுத்துாண் தொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்தியோகன் மாறே. -நான்காம் பத்து; 8 : 13-16. இதனால் செல்வத்துப் பயனே ஈதல் என்பதனையும், 'இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தனித் துண்ணாமையே சால்பு’ என்பதனையும் நன்கு அறிந் திருந்தவன் நார்முடிச் சேரல் என்பதனையும், தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருந்தகையோன் அவன் என்பதனையும் இனிதின் அறியலாம். விறலி நார்முடிச் சேரலை நண்ணினால் பகைவர் நாட்டிலிருந்து கைப்பற்றிய தொழில் புகல் யானை பல