பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 எனவரும் பகுதி கொண்டு, கபிலர் ஊர்கள் பலவற்றைப் பரிசிலாகப் பெற்றார் என அறியலாம். அடுத்து, எட்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் கொடைப் பண்புகளை அரிசில்கிழார் வழிநின்று காண்போம். பெருஞ்சேரல்' இரும்பொறையின் வளமும், ஆண்மையும் கொடைச் சிறப்பும், சிந்தையும் மொழியும் செல்லா நிலைமையினை யுடையன. வளனும் ஆண்மையும் கைவண் மையும் மாந்தர் அளவிறங் தன. -எட்டாம் பத்து : 3:12-13. மேலும் நாளவை யன்றியும், பகைவர் நடுவின்கண் அமைந்த பாசறையின் கண்ணும் ஆடிப்பாடி வரும் இரவலர்க்கு, களிறும் குதிரையும் கணக்கின்றிக் கொடுக்கும் கொடைப் பண்புடைய கோடா நெஞ்சினன் பெருஞ்சேரல் இரும்பொறை என்று அரிசில்கிழார் அழகுறப் பாராட்டி யுளளாா. இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்ததெனன். -எட்டாம் பத்து ; 6:7.9. வரையாது வாரி வழங்கும் இவன் கைவண்மையினை, கொடை போற்றலையே இரவலர் நடுவண். — 8; 9:2. என்று கூறியிருப்பதும், பதிகம் அரும்பெறல் மரபின் அரசக் கட்டிலையே அரிசில்கிழார்க்கு உவந்தளித்த நெஞ்சினன் இவன் என்று கூறுவதனையும் உன்னி நோக்கின் பெருஞ் சேரலிரும்பொறையின் கொடைப் பெருமிதம் குன்றிலிட்ட விளக்கென ஒளிரா நிற்கும். இறுதியாக, ஒன்பதாம் ப த் தி ன் பாட்டுடைத் தலைவனாகிய குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையின்