பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வருநர் வரையாச் செழும்பஃறாரம், கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப" என்றும், ஈரம் உடைமையின் நீரோர் அனையை' என்றும், கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை' என்றும் குடக்கோ இளஞ் சேரல் இரும்பொறையின் ஈகைப்பண்பினை இனிமையுறப் புலப்படுத்தியுள்ளார் பெருங்குன்றுார் கிழார் என்னும் புலமைச் சான்றோர். இவ்வாறு பதிற்றுப்பத்து என்னும் சங்கத் தமிழ் நூலில் சேர வேந்தர் எண்மரின் இனிய ஈகை வளம் இனிமையுற இயம்பப்பட்டுள்ளது. பாடல்களை இயற்றிய புலவர் பெரு மக்கள் பெற்ற பரிசில்களைப் பதிகவழி அறியும்பொழுது சேர வேந்தரின் கொடை வளத்தினைக் கண்டு வியக்கத் தோன்றுகின்றது. வீரத்தின் விளைநிலமான அவர் தம் நெஞ்சமே, ஈரத்தின் பிறப்பிடமாகவும் துலங்கிய செம்மை அறிந்து போற்றத்தக்கது. சே. செ. இ-10