பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 (Ullurai is a kind of implied simile divised for exclusive use in Ainthinai) lt is arranged from the fauna and fiora of any region, technically called Karupporul —Dr. V. S. P. Manickam, The Tamil concept of Love page 124). ஐங்குறுநூற்றில் மருதத்திணைப் பாடல்கள் பல வற்றுள்ளும் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்டுறை ஊரன்' என்ற தொடரில் உள்ளுறைப் பொருள் அமைந்துள்ளது. பலவாகிய இதழ்களால் சிறப்புடை நீல மலரோடு நெய்தல் மலர் நிகர்க்கும் ஊரன் என்றதனால் சிறப்புடைய கருங்குவளை மலருடனே சிறப்பில்லாத நெய்தல் மலரை நிகர்க்கும் ஊரன் எனப் பேசப்படுதலால் குலமகளிரோடு பொது மகளிரை மனத்திற் கொள்பவன் என்னும் குறிப்புப் பெறப்பட்டுத் தலைமகனின் இழிந்த ஒழுக்கம் சுட்டிக் காட்டப் பெற்றதாம். இவ்வாறு சில பாடல்கள் வேட்கைப் பத்தில் உள்ளுறைப் பொருள் பொருந்தி வந்துள்ளன. இறைச்சி

இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்த தாகித் தோன்றும் பொருள்' என்றும், 'இறைச்சிப் பொருள்வயிற்றோன்றும் பொருளும் உள' என்றும் தொல் காப்பியனார் இறைச்சி குறித்துக் குறிப்பிட்டுள்ளார். ‘(Suggestive meaning conveyed indirectly by reference to the distinctive features of the tract of land"—Tamil Lexicon; Volume: 1 page 366).

4. ஐங்குறுதுாறு: வேட்கைப்பத்து:-21-4-55. தொல்; பொருளியல்: 35. 6. 11 HP --- 36.