பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

545 முலை மீது தடவிக் கிடந்த நஞ்சினை உறிஞ்சி அமுது செய்து, இவ்வாறு செய்ததன் காரணமாக, பைத்தியக் காரன் என்று அயலவர் அனைவரும் பரிகசிக்கும்படி நின்ற பிரானே! நான் மிகுந்த ஆசையோடு உன்னை எதிர்பார்த் திருக்கையில் நீ என்னால் தூதனுப்பப்பட்டு உன்னிடம் வந்த என் வேலைக்காரியோடு நல்ல இன்பத்தை நலமுற அனுபவித்தாய். அந்தச் செய்கையும் உனது தீம்புக்கு ஏற்புடைத்தாகும் என்று கண்ணனின் திருவிளையாடல் களை எடுத்து மொழிகிறாள் ஒர் ஆய்ச்சி. (5) மின்னல் போலும் மெல்லிய இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு, மிக்க இருள் பரவிய ( வ ைள யி லே பொன்னாடையாம் பீதாம்பரத்தாலே முக்காடிட்டுக் கொண்டு என் வீதியினுாடே அவளும் lயுமாகப் போகும்பொழுது நான் அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றியும், நீ கண்ணில் தென்பட்ட வேறொருத்தியைக் கடைக்கணித்து நோக்கிப் பின் இன்னவிடத்தே வாவென்று குறியிடங் காட்டிக் கையாலே அழைத்ததனையும் நான் பார்த்துக் கொண்டு தானிருந்தேன். அந்தப் பெண்ணை நீ விடுத்து எதற்காக என்னிடம் வந்தாய்? சுவாமி! இனிமேலும் நீ அவர்களிருக்கு மிடத்திற்கே நடப்பாயாக' என்று ஊடல் நோக்கோடு ஒருத்தி மொழிகிறாள். (6) மல்லரோடு போர் செய்த தோள்களையுடைய கண்ணபிரானே! பெரிதும் பாவியான நான் உறங்கு வதற்குத் தொடங்கியவுடனே அன்றிரவு நடு யாமத்திலே இனிய படுக்கையிலே என்னைப் படுக்கவிட்டு நீ விலகிப் போய் என்னைவிட்டு அகன்று போன அன்றிரவும் அதற்கு மறுநாளும் எல்லாப் பெண்களோடும் கலவி செய்து வந்தாய். இப்படிப்பட்ட நீ என்னருகில் எதற்காக வந்தாய்? எம்பெருமானே நீ அவர்களிடமே போகக் கடவாயாக' என்கிறாள் ஆயர்குல மகளொருத்தி. சே. செ. இ.35