629 தலையுச்சியினைத் தீண்டினால் கோபிப்பேன். அதனையும் மீறி அவன் என் கொங்கைகளைத் தொடப் புகுந்தால் என் கற்புநிலை கெடுவேன்; வானவர் வணங்க நின்ற நின் தலைமைக்கு இஃது அழகன்று என்பேன். என் தொடி பணிந்த தோள்களைத் தொட முனைந்தால் அவனுடைய திருவாணை மொழியைக் கூறித் தடுப்பேன். : கிடங்கினுள் விழுந்த முதலை, அதனுள்ளிருந்து உணவுக்காக அகப்படும் பிறவற்றை எதிர்ப்பார்த்தும், வெளியேற முடியாமல் தவித்தும் வாழும். இந் நிலை பினைக் கேவலரானவர் பலர், தாம் தொடங்கிய இல்வாழ்க்கை நிலையில் நின்று, இல்வாழ்க்கைக்குரிய அறங்களைச் செய்து பயன்பெறாது அவ்வாழ்க்கையை வெறுத்து வீணே துறப்பர்; அவ்வாறு துறந்தவர், தம் பற்றினைச் சிவன்பால் வைத்தல் செய்யார்; ஆகவே மறுமைப் பயனைப் பெற ஈசனுக்கும் ஆளாகாமல், இம்மைப் பயன்பெற மனைவாழ்க்கைக்கும் உதவாமல் வாழும் நிலைக்கு உவமித்துள்ளார்:
- தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை யரன்பா லிலரறு காற்பரவை முடங்கிய செஞ்சடை முக்கணா னார்க்கன்றி யிங்குமன்றிக் கிடங்கினிற் பட்ட கராவனை யார்பலர் கேவலரே. 48 உமையொரு பாகனாக வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவுருவத்தைச் சிறப்பிக்கிறது 65ஆம் பாடல்.
- ஈசன் வலம் பூண்பது கழல்; இடம் பூண்பது பாடகம்; வலமணிவது நாகாபரணம்; இடமணிவது அரதனாபரணங்
44. பொன்வண்ணத்தந்தாதி 63. 45. 64 תג.