இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
637 மாநிலத் தோர்கட்குத் தேவ ரனையவத் தேவரெல்லா மானலத் தாற்றொழு மஞ்சடை யீச னவன் பெருமை தேனலர்த் தாமரை யோன்றிரு மாலவர் தேர்ந்துணரார் பாநலத் தாற்கவி யாமெங்ங் னேயினிப் பாடுவதே." :ஈசன் அணிந்துள்ள வெண்ணிறு அவனது சடை முடியிலுள்ள நாகம் விட்ட பெருமூச்சாற் பெருகிய தீப்பட்டு உருகிய சந்திரகலையின் ஊற்றொழுக்கை ஒத்துள்ளது. உமாதேவி பாகமான அவன் திருமேனியானது கங்கையும், தெளிந்த நீருள்ள யமுனையுந் தம்முட் கூடிய சங்கமத்தை ஒத்துள்ளது' எனப் பேசுகின்றது ஒரு பாடல். 92ஆம் பாடல் ஒரு முடிமணியாயமைந்த பாடல்; அரிய கருத்துகள் அடங்கியது.
- இறைவனைச் சிந்திக்க மனத்தையும், அவன் புகழ் பேச நாவையும், வணங்கத் தலையையும், தொழக் கையையும். நன்கு பிணிக்க அன்பையும், அவனுக்கே உடம்பினையும் யான் நியமித்துக் கொண்டேன்.'
சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழவமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் யரும்ப வைத்தேன் வெந்தவெண் ணிறணி யீசற் கிவையான் விதித்தனவே. : 64. பொன்வண்ணத்தந்தாதி; 89. 65. .90 גל. 66. > 5. 92.